June 27, 2026

அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: அன்புமணி கோரிக்கை

ஜூன் 25: அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வரும் அரசுப் பள்ளிகளில் 18,107 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக தெரிவித்துள்ளார். இவ்வளவு ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பது ஏழை குழந்தைகளின் கல்வியை பாதிக்கும் என அவர் கூறியுள்ளார்.

மேலும், பள்ளிகளை வழிநடத்தக்கூடிய தலைமை ஆசிரியர் பணியிடங்கள் 1,214 என்ற எண்ணிக்கையில் காலியாக உள்ளதாகவும், அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் 93 காலியிடங்கள் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர் சேர்க்கை குறைவு தொடர்பாகவும் அவர் தனது அறிக்கையில் கருத்து தெரிவித்துள்ளார். அரசுப் பள்ளிகளில் கல்வித் தரம் பாதிக்கப்படுவதற்கு போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படாததே காரணம் என அவர் கூறியுள்ளார். இதனால் மாணவர் சேர்க்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசுப் பள்ளிகளில் நடப்பாண்டில் 5 லட்சம் மாணவர்கள் சேர்க்கை இலக்காக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இதுவரை சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குறிப்பிட்ட பாடங்களுக்கு ஆசிரியர்கள் இல்லாததால் மாணவர்கள் அடிப்படை பாடங்களைப் புரிந்துகொள்ள சிரமப்படுவதாகவும், உள்ளிருக்கும் ஆசிரியர்கள் கூடுதல் பணிச்சுமையை எதிர்கொள்கிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை விரைவாக நிரப்ப தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதன் மூலம் மாணவர் சேர்க்கையை உயர்த்த முடியும் என்றும் அன்புமணி தனது அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.

Written by

ASWATHTHAMAN N

District Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

INDIAN PRESS UNION

Indian Press Union (IPU) A National Platform for Journalists and Media Professionals.

© 2026 All Rights Reserved IPU MEDIA ASSOCIATION