June 27, 2026

சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம்: இளைஞர்களுக்கு விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்த முதல்வர் விஜய் வலியுறுத்தல்

ஜூன் 27: சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு முதல்வர் விஜய், இளைஞர்கள் கல்வி, விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகளில் அதிகமாக ஈடுபட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பின்படி, முதல்வர் தனது சமூக வலைதளப் பதிவில், போதைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது அவசியம் என்றும், இளைஞர்களின் எதிர்காலத்தை பாதுகாக்க கல்வி, விளையாட்டு மற்றும் திறன் மேம்பாடு போன்ற ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை ஊக்குவிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், “கடுமையான சட்ட நடவடிக்கைகள் மற்றும் சமூகத்தின் ஒருங்கிணைந்த முயற்சிகள் மூலம் போதைப் பொருட்களை ஒழித்து, வலிமையான சமுதாயத்தை உருவாக்க முடியும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

போதைப் பொருள் தொடர்பான குற்றங்களைத் தடுக்க தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும், “Start Run, Stop Drugs” மற்றும் “ஸ்போர்ட்ஸ் எடு, ட்ரக்ஸ் விடு” என்ற விழிப்புணர்வு முழக்கத்தையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக, சென்னையில் நடைபெற்ற “Start Run, Stop Drugs” போதைப் பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு ஓட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்து, அதில் பங்கேற்றார்.

Written by

ASWATHTHAMAN N

District Reporter

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

INDIAN PRESS UNION

Indian Press Union (IPU) A National Platform for Journalists and Media Professionals.

© 2026 All Rights Reserved IPU MEDIA ASSOCIATION