e-Courts செயலியை பயன்படுத்தும் வழக்கறிஞர்கள், வழக்குதாரர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கவனத்திற்கு:
இந்திய உச்சநீதிமன்றத்தின் e-Committee வெளியிட்டுள்ள தகவலின்படி, Android பயனர்களுக்கான e-Courts Services Mobile App Version 4.0, 13.05.2026 முதல் அமலுக்கு வர உள்ளது.
இதையடுத்து, தற்போது e-Courts செயலியை பயன்படுத்தும் பயனர்கள் தங்களது செயலியில் சேமிக்கப்பட்டுள்ள வழக்கு விவரங்களை பாதுகாப்பாக வைத்திருக்க Data Backup செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Backup செய்வது எப்படி?
- மொபைலில் உள்ள e-Courts Services App-ஐ திறக்கவும்.
- Menu / Profile பகுதிக்கு செல்லவும்.
- “Export” என்ற விருப்பத்தை தேர்வு செய்யவும்.
- My Cases / Saved Cases விவரங்களை Backup செய்யவும்.
- Backup செய்யப்பட்ட கோப்புகளை மொபைல், Email அல்லது Cloud சேமிப்பகத்தில் பாதுகாக்கவும்.
முக்கிய தேதி
12.05.2026க்குள் Backup செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதிய Version 4.0-ல் கிடைக்கும் வசதிகள்
- Court Order PDF-ஐ நேரடியாக பார்வையிடும் வசதி
- பழைய மற்றும் புதிய Case Number Tracking
- Quick Links வசதி
- Bhuvan Map Integration
- மேம்பட்ட செயல்திறன்
e-Courts செயலியை பயன்படுத்தும் அனைவரும் தங்களது வழக்கு விவரங்களை பாதுகாக்க தேவையான Backup நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.